Wednesday, July 7, 2010

கருணாநிதிக்கு செம டோஸ்.

அண்மையில் உங்களில் பலரும் கண்டுகளித்திருக்கக் கூடிய மாபெரும் நகைச்சுவை நிகழ்ச்சி செம்மொழி மாநாடு. உங்களுக்கு எப்படியோ எமக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. அதைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.

கருணாநிதி ஆட்சி கிட்டத்தட்ட முடியும் இவ்வேளையில் செம்மொழி மாநாடும் நடந்து முடிந்திருக்கிறது. அதாவது ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக தமிழுக்காக ஏதும் செய்யாத நிலையில் ஆட்சி முடிவடையும் நிலையில் விழா எடுக்க காரணம் என்ன? (பலமுறை ஆட்சிக்கு வந்ததையும் கணக்கில் கொள்ளலாம்)

மக்கள் மனதில் தனது ஆட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கென்றா நினைக்கிறீர்கள். எமக்கு அப்படியெல்லாம் நம்பிக்கையில்லை. பலநூறு கோடிகள் புரளும் இந்தவிழா ஆட்சியாளர்களுக்கு அமுதசுரபி. விழாமுடிந்தும் பல திட்டங்கள் தீட்டி  பணம் ஒதுக்க வசதியை அளிக்க இடம்தருவது தமிழ்த்தாய்க்கு மருத்துவம் பார்ப்பது.

இந்த ஆட்சி முன்னெப்போதும் நடந்திராத அளவிற்கு கட்டற்ற அதிகாரத்துடன் மக்களின் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் மறுத்து மக்களை மந்தைகளைப்போல் நடத்தியிருக்கிறது. மந்தையில் சில ஆடுகள் உரிமைகளுக்காக கூக்குரலிட்டாலும் பெரும்பான்மையான ஆடுகள் மந்தையில் ஐக்கியமாகிவிட்டன. 

சராசரி தமிழனுக்கு இந்த கருணாநிதியின் கீழ்மை குணம் தெரியாதது கூட பிரச்சனையல்ல. படித்த, சுயநலமிக்க, மனிதரிலும் விலங்குகளிலும் சேர்க்க முடியாதபடி அலையும் ஒரு கூட்டம், கருணாநிதியின்பின் நக்கிப்பிழைக்க அலைவதுதான், நாம் வாழும் சுழலை நமக்கு உணர்த்துகிறது. இப்படியாப்பட்ட பயல்கள் இருக்கும் வரையில் கருணாநிதிக்கு என்னபயம்?

சரி காமெடிக்கு வருவோம்.

செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கங்களில் ஒன்று கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம். இதை எளிமைப்படுத்திச் சொல்வதெனில் "சிங்கம் கிளம்பிடுச்சுடோய்!" என்று நாம் நக்கலுக்கு சொல்லும் வரிகளையே கவியரங்கத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது காமெடி மூடு வரணுமில்ல.

கவியரங்கில் பங்கேற்ற பலரைப்பற்றி உங்களுக்கு சிறு அறிமுகம் தருகிறோம்.

அதாவது கவியரங்கத் தலைவர் வைரமுத்து இருக்காரே அவருக்கு எந்த ஆட்சி வந்தாலும் பிரச்சனை இல்லை. ஆட்சியாளர்களின் தயவு தேவைப்படும் பட்டியலிலும் இவர் தலைமைக் கவிஞர்தான். அதாவது போக்குவரத்து நெரிசல் மிக்க கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் ஏரியாவில் கார் பார்க்கிங் வசதிகூட இல்லாமல் அம்மாம் பெரிய கல்யாண மண்டபத்தை நடத்தறதுன்னா சும்மாவா? இதுமாதிரி பல விசயங்களுக்கு ஆட்சியாளர்களைப் பகைச்சுக்கிட்டா வண்டி ஓடுமா?

அடுத்த ஆளப் பார்ப்போம்.
மரபின் மைந்தன் முத்தையா.
இவர் வைரமுத்து, ஜக்கி வாசுதேவ் போன்ற பல தலைகளுக்கு வலதுகரமாக இருப்பவர். ஆதாயம் கிடைக்குமெனின் இடதுகரமாகவும் இருப்பவர். நுண்ணறிவும் படிக்கிற பழக்கமும் இருந்தாலும் அதிகார வர்க்கத்துடன் ஒட்டிக்கொண்டு அலைபவர். எனவே இவரது அறிவுக்கு எந்த மரியாதையும் கிடையாது.

வாராரய்யா வாராரு முத்துக்குமாரு.
இருக்கிற கழிசடை திரைக்கவிஞர் கூட்டத்தில் இவர் கொஞ்சம் பரவாயில்லையென பேசப்படுபவர்.

வைரமுத்துவின் பருத்த பின்புறம் இளைஞர்கள் திரைத்துறையில் நுழைய தடையாக இருப்பதாக சில வருடங்களுக்குமுன் புலம்பியவர்தான் முத்துக்குமார். இப்போது இவரது பின்புறம் பருத்துவிட்டதாக் பல இளைஞர்கள் சொல்கிறார்கள். இவர் எல்லா படங்களுக்கும் எழுதமுடியாமல், எழுதிக் கொடுப்பதற்கென்றே ஒரு பாக்டரி வைத்திருக்கிறார் என்றும் அந்த கவிதைத் தொழிற்சாலையில் புதிதாக பாடல் எழுத வரும் பலர் பணிபுரிவதாகவும் நமக்கு செய்திகள் வருகின்றன.

தமிழச்சி.
அவர் ஒரு தி.மு.க கவிஞர்.


வாலி.
பார்ப்பானைத்திட்டி கைதட்டல் வாங்கிய பார்ப்பான்.
பொதுவாகவே பார்ப்பான்
எல்லோரது சாவிலும் பிழைக்கப் பார்ப்பான்.

வாலி தலைமையிலான கவிதை அமர்வில் பழனிபாரதி.
பாரதி பெயரை கெடுக்க பலபேர். அதில் இவருக்கு இப்போதுதான் இடம் கிடைத்திருக்கிறது.

பாரதி என்றவுடன் யுகபாரதியின் நினைவு வருகிறது.
இந்த கவியரங்கில் இல்லையென்றாலும் கருணாநிதிக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் துதிபாடினான் யுகபாரதி.

கணையாழி அலுவலகப் பொடியனாக (ஆபீஸ் பாய்) இவன் இருந்தபோது, தங்களது படைப்புகளை கணையாழி பிரசுரத்துக்கு அனுப்பிவைத்த எழுத்தாளர்கள், அது குறித்து அறிய  இவனுக்கு தொலைபேசியில் பேசிவிட்டு வைத்தவுடன், மற்றவர்களிடம் "அலையறானுங்க" என்று கேவலமாகப் பேசியவன். அதேபோல் பிரிண்டிங் மெஷின் தந்த திமிருடைய பலரில் இளையபாரதியும் தமிழினி வசந்தகுமாரும் உண்டு.

சரி குதிரை வேறு திசையில் ஓடத்தொடங்கிவிட்டது.
மீண்டும் காமெடிக்கு வருவோம்.

ம.முத்தையா, தணிகைச்செல்வன், இளம்பிறை உள்ளிட்ட பலரும் ஈழத்தை நினைத்து கொதித்தார்கள். கருணாநிதி முகம் சுழிப்பதற்குள் அவரைப் பாராட்டி நான்குவரி பாடி மகிழ்வித்தார்கள்.

சிறுபிள்ளைகளைகளிடமிருந்து ஒரு பொருளை மறைத்து பாதுகாக்க ச்சூ என காற்றில் கைவீசி பொருளை கக்கத்துக்குள்ளே மறைத்து விடுவோம். குழந்தையும் வானத்தைப்பார்த்து ஏமார்ந்துபோகும். அதேபோல்தான் ஈழத்தின் நிலையை எண்ணி கொதித்தார்கள் இந்த கவிஞர்கள். ஆனால் அவர்கள் கைநீட்டிய திசையைப் பார்த்தோம். அங்கு இன அழிப்புக்கு துணைபோன யாருமே இல்லை. கவிஞர்களின் கக்கத்துக்குள் கருணாநிதி பாதுகாப்பாக இருந்தார்.

கருணாநிதியின் கட்சிக்காரர்களைவிட இந்த கவிஞர்கள் ஆபத்தானவர்கள். குற்றவாளியை பாராட்டுவதன் மூலம் இவர் குற்றவாளி இல்லையென மக்களிடம் பொய்ப்பிரச்சாரத்தையும் செய்பவர்கள் ஆகிறார்கள்.

வாயார, மனதார கருணாநிதியை பலர் புகழ்ந்தாலும் அந்த புகழ்மொழிகளுக்குள்ளும் வசைச்சொற்கள் அவர்கள் அறியாவண்ணம் நிறைந்து கிடந்தன. எடுத்துக்காட்டாக வைரமுத்துவின் வரிகளைப் பாருங்கள்.

"உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு"



கருணாநிதியை மட்டுமல்ல வேறு யாரையுமே பகைத்துக்கொள்ள மாட்டார் வைரமுத்து என முன்பே பார்த்தோம். காப்பீட்டு திட்டம் என்பது ஆரோக்கியத்தின் குறியீடாகக் கருதியே மேற்கண்ட வரிகளை  வைரமுத்து எழுதியிருந்தாலும் அந்த வரிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன?


உழவன் சேர்ந்தான் = உனது ஆட்சியில் உழவன் நலமாயில்லை.
உழைப்பாளி சேர்ந்தான் = அவனும் ஆரோக்கியமாக இல்லை.
அன்னத்தாய், பொன்னுத்தாய் = ஏழை எளிய மக்களையும் நீ நன்றாக வைத்திருக்கவில்லை.
தமிழ்த்தாயை காப்பீட்டில் சேர்ப்பது  = கடந்த உன் ஆட்சியில் தமிழுக்காக நீ ஏதும் செய்யவில்லை.


மொத்தத்தில் கருணாநிதியைப் பார்த்து,
"உன் ஆட்சியில் தமிழன் எந்த நன்மையையும் அடையவில்லை" என்று வைரமுத்து அவரையும் அறியாமல் சொல்லிவிட்டார். 


வைரமுத்து கடுமையான விமர்சனப் பார்வையுடன்தான் இதைச் சொல்லியிருக்கமுடியும் என்று நினைக்கவைப்பது "தடபுடல் மாநாடு" என்ற சொற்பிரயோகத்தால்தான். ஆனால் நமக்குத் தெரியும் கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்ட பிழைப்புவாதிகளின் பட்டியலில் வைரமுத்து அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் என்று.



வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு:
  1. இவர்களில் எவனும் கருணாநிதிக்கு எதிராகப் பேசி தனது வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளமாட்டான்.
  2. அப்படியே இவர்கள் கருணாநிதிக்கு எதிராகப் பேசினாலும் அவருக்கு ஏதும் நடந்துவிடாது.

Saturday, May 15, 2010

செட் ப்ராப்பர்டிகளாகும் சிறு தெய்வங்கள்


காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஒரு செய்தியை பெரிதுபடுத்துகிறார்கள் எனில் அவர்களுக்கு அதில் ஏதோ ஆதாயம் இருக்கிறது என்பதுதான் இப்போதைய சூழல். 

பிரச்சனைக்குரிய ஒரு விடயத்தில் அழகான பெண் அல்லது  திரைப்பட நடிகர்,  நடிகை இவர்களில் ஒருவருக்கு தொடர்பிருக்கிறது எனில், அவ்விடயத்தில் ஊடகங்களின் அக்கறையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

நீதிமன்றம் வரும்போதெல்லாம் அவர்களைப் படம்பிடித்து வெளியிட்டு அச்சு ஊடகங்கள் சர்க்குலேஷனை கூட்டிக்கொள்கின்றன. தொலைக்காட்சியினரோ டிஆர்பி எகிறக்கண்டு மகிழ்கிறார்கள். 

பார்வதி ஷா, ஜீவஜோதி, நித்யானந்தா விடயத்தில் ரஞ்சிதா என பல பெண்கள் தொடர் செய்திகளாகின்றார்கள். அழகான பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும் நாம் போராடலாம். அதுவல்ல பிரச்சனை. அவர்கள் விடயத்திலும் உண்மையை வெளிக்கொண்டுவருவது ஊடகங்களின் நோக்கமல்ல. அதுபோலவே பாதிக்கப்பட்ட பெண் வத்தலும் தொத்தலுமான, ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவரெனில் அந்த அபலைகளுக்காக இந்த ஊடகங்கள் உண்மையாக ஏதும் செய்வதில்லை.

செய்தியாவதே தவிர்க்கப்படும்போது Follow-Up க்கு வேலையே இல்லை.  



இந்த வரிசையில் இப்போது காட்சிப் பொருளாக்கப்படுவது சிறுதெய்வங்கள். சன் டிவியில் நிஜம், ஸ்டார் விஜய்யில் குற்றம்: நடந்தது என்ன, ஜி தொலைக்காட்சியில் நம்பினால் நம்புங்கள். இப்படி பெயர்கள் பலவாயினும் இவர்கள் அனைவரது நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றுதான்.

தொடர்ச்சியாக நிகழ்ச்சியை ஓட்டமுடியாமல் காய்ந்து கிடக்கும் இவர்கள், காட்சி மொழியில் மிரட்டலாக எதையாவது காட்டி எபிசோடை நீட்டிக்கிறார்கள். அப்படி மிரட்டுவதற்கு ஏதும் இல்லாத நிலையில் கம்பீரமாக நிற்கும் சிறு தெய்வங்களைக் காட்டி பிழைப்பை ஓட்டுகிறார்கள். 

இவர்கள் வேறென்ன செய்வார்கள்.ஊத்தைவாய் சங்கரமட பாப்பானை விட்டு விட்டார்கள். சொர்ணமால்யாவால்தான் அந்த பிரம்மச்சாரிக்கு மவுசு. பெருந்தெய்வ வழிபாடுகளில் காட்டுவதற்கு சிவன் ஒரு சொங்கிப்பயல் போலும். அவனையும் காட்ட ஒன்றுமில்லை. நீதா அம்பானியின் பெயரைக் கேட்டால் வெங்கடாசலபதியும் நள்ளிரவில் கதவைத் திறந்துவைக்கிறார். இரண்டு நாட்கள் செய்தியானார்.


இந்த நிலை சின்னத்திரையில் மட்டுமல்ல. தமிழ்ப்படத்தில் கூட ஒரு கிராமத்தின் எல்லையில் செட் ப்ராப்பர்டியாக சிறுதெய்வம் இருப்பதைக் கராபிக்சில் காட்டி கிண்டல் செய்கிறார்கள். 

ராம் படத்தில் அரைவேக்காடு அமீர் உருவாக்கிய ஆன்மிக half-boil கதாநாயகன் ஒருபாடலில் சிறுதெய்வ வழிபாடு நடத்துபவர்களிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி அவர்களை விரட்டுகிறார். 

எளிய மக்களின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தும் பணியைத்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் செய்கின்றனவேயன்றி, மக்களது வாழ்வியலின் ஊடாகச் சென்று அவற்றை ஆவணப்படுத்துவதில்லை.

இந்த மாதிரி க்ரைம் நிகழ்ச்சிகளில் சாதாரணமாக ஒரு குழந்தை பிறந்த தகவலைக்கூட குற்றச் செயல்போல் அழுத்தமான குரலில் பேசி மிரளவைக்க முயற்சிக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் விஜய் டிவியினர், அமானுஷ்ய கதைகள் உங்கள் பகுதியில் ஏதாவது கிடைக்குமா? என்று கேட்டார்களாம். இதை என்னிடம் சொல்லிவிட்டு, " அப்படியெல்லாம் சொல்லிர  முடியாதுல்ல" என்றார் சொரணையுள்ள அந்த நண்பர்.

வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு:
  • ஆளும் அரசின் அதிகாரத்திற்கெதிராகவும் ஊழல் குறித்தும் புலனாய்வு செய்து செய்தி வெளியிட வக்கில்லாத, துணிவில்லாத, புத்தியில்லாத சின்னப்பயல்களால் தயாரிக்கப்படுவதுதான் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.
  • இப்படிப்பட்டவர்கள் அடுத்தமுறை படம்பிடிக்க வந்தால் படம் பிடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு கெடாச்சோறு போட்டு அனுப்பலாம்.


Friday, May 14, 2010

எம்மைப்பற்றி

வணக்கம் வலையுலக நண்பர்களே!

நெடுங்காலமாய், ஊடகம் சார்ந்த எமது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்ய ஒரு வலைப்பூ தேவையென நினைத்திருந்தாலும் இப்போதுதான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக அது முடிவாகியிருக்கிறது.

அரசியல் சார்பற்று, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அனைவரையும் வெளுத்து கொடியில் காயப்போடுவதே எமது நோக்கம்.

கருத்து சார்புள்ள, சார்பற்ற அனைவரும் எமது கருத்துரிமைக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

மிக்க அன்புடன் 
வெட்டு 1 துண்டு 2.